Dr Maran – Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai

பருமனானவர்களுக்கு ஏற்படும் அகோரப்பசியை எப்படி கட்டுப்படுத்துவது

உடல் எடை சற்று அதிகமாக இருப்பவர்களும், உடல் பருமனாக இருப்பவர்களும் தாங்கள் வாழும் வாழ்கை முறையையும், உணவு முறையையும் மாற்றியமைத்து உடல் பருமனிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழவே பெரும்பாலும் விரும்புகின்றனர். அதேபோல பெரியாட்ரிக் அறுவை சிகிச்சையை செய்துக் கொண்டவர்களும் உணவின் பால் அவர்களுக்கு உள்ள ஈர்ப்பை குறைக்கவே மிகவும் விரும்புகின்றனர். உணவின் மேல் ஏற்படும் இந்த ஈர்ப்பு அகோரப்பசியாக உருவெடுத்து பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை அளித்த நன்மைகளை புறந்தள்ளும் அபாயம் உள்ளது. அப்படியென்றால் பருமனானவர்களுக்கு ஏற்படும் அகோரப்பசியை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

உணவை அதிகமாக உண்ண தூண்டும் காரணிகள் என்னென்ன?

உங்கள் உடல் சுரக்கும் ஹார்மோன்கள் தான் முதல் காரணம் ஆகும். சர்க்கரை மிகுந்த மாவுச்சத்து உணவுகள் தான் அதிகப்படியான பசியை திரும்பத்திரும்ப ஏற்படுத்துகின்றன. ஏனென்றால், சர்க்கரை மிகுந்த உணவுகளை நம் உடலுக்கு கொடுக்கும்போது நம் உடல் எண்டார்பின் (endorphin) என்ற ஹார்மோனை சுரக்கின்றது. இந்த ஹார்மோன் உடலுக்கு தற்காலிகமான சுகத்தை தருகின்றது. ஆனால் சர்க்கரையோ விரைவாக செரிமானம் ஆகி விரைவாக நம் வயிற்றை விட்டு வெளியேறுகிறது. இப்போது சுரக்கும் பசியைத் தூண்டும் ஹார்மோன்கள் மேலும் சர்க்கரையை கேட்டு மூளைக்கு சமிஞையை அனுப்புகிறது.

அகோரப்பசியை கட்டுப்படுத்தும் சில வழிமுறைகள்

Exit mobile version