Dr Maran – Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai

பித்தப்பையை அகற்றினால் என்ன ஆகும்?

கொலிசிஸ்டெக்டமி (Cholecystectomy) என்று சொல்லப்படும் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையானது, பித்தப்பையில் கல் இருந்தால் செய்யப்படும் ஒரு அறுவை சிகிச்சை முறை ஆகும். இயல்பாகவே பித்தநீரானது ஈரலால் எந்நேரமும் சுரக்கப்பட்டு, பின் கெட்டியான நீர்ம பதத்தில் பித்தப்பையில் சேகரிக்கப்படுகிறது. பித்தப்பையை அகற்றிவிட்டால் என்ன ஆகும்? உடலின் ஒரு உறுப்பை அகற்றிவிட்டால் பின்னாளில் நிறைய சிக்கல்கள் வரும் என்றே பலரும் நம்புகின்றனர். பித்தப்பையை அகற்றிய பின் நம் வாழ்கை முறை எப்படி மாறுகிறது? வாருங்கள் அலசுவோம்.

பித்தப்பையை அகற்றுவதால் ஏற்படும் விளைவுகள்

பித்தப்பையை அகற்றிய பின் உள்ள வாழ்கைமுறை

பொதுவாக இருக்கும் தவறான கருத்துகள்

பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையானது பெரும்பாலும் நாற்பது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கே செய்யப்படுகிறது. பொதுவாகவே நாற்பது வயதுக்கு மேலே நம் உடலின் செரிமான சக்தி சிறிது மட்டுப்படும். அதனால் நாற்பது வயதுக்கு மேலே உள்ளவர்கள் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டால் அதனால் தான் தனக்கு செரிமான சக்தி குறைந்துபோய்விட்டது என்று அங்கலாய்ப்பதும் உண்டு. இது அநேகமாக தவறான பார்வையாகத் தான் இருக்கும்.

முடிவு – சென்னையில் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை நிறைய செய்யும் அறுவை சிகிச்சை நிபுணரான மரு. மாறன் அவர்கள் என்ன சொல்கிறார் என்றால், அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பையை அகற்றியவர்கள் மிக இயல்பான வாழ்க்கையையே வாழ்கிறார்கள். அவர் மேலும் கூறுகையில், சிறு வயது குழந்தைகளுக்கு பித்தப்பையை அகற்றினாலும் அக்குழந்தை இயல்பாகவே வளரும்.

Exit mobile version