Dr Maran – Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai

இரத்த சோகையை ஏற்படுத்தும் மருந்துகள்

சில மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், எந்தவொரு மருந்தாலும் ஏற்படும் பக்க விளைவுகள் குறைந்த அளவிலும், ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் இருக்கும். ஏனெனில் பரிந்துரைக்கப்பட்ட மருந்து இல்லாமல் எந்த முக்கிய நோய்க்கும் சிகிச்சையளிக்க முடியாது. மேற்குறிப்பிடப்பட்ட  ஒரு பக்க விளைவு இரத்த சோகையாக கூட இருக்கலாம்.

இரத்த சோகையை ஏற்படுத்தும் மருந்துகள் யாவை?

பொதுவாக, நீங்கள் நீண்டகாலத்திற்கு மருந்துகள் எடுத்துக் கொள்ளும் நோய்நிலையில் இருந்தால், உங்கள் ஹீமோகுளோபின் அளவை எப்போதும் சரிபார்க்க வேண்டும்.

சில மருந்துகள் இரத்த சோகையை ஏற்படுத்துவதற்கான காரணங்கள் என்ன?

மருந்துகளால் தூண்டப்பட்ட இரத்த சோகையின் அறிகுறிகள்

மருந்துகளால் தூண்டப்பட்ட இரத்த சோகையின் எந்த வடிவத்தின் அறிகுறிகளும் மற்ற வகை இரத்த சோகைக்கு கிட்டத்தட்ட ஒத்தே இருக்கும். பொதுவான இரத்த சோகை அறிகுறிகளை மருத்துவர்கள் பார்ப்பார்கள். அவை,

பொதுவான இரத்த சோகை அறிகுறிகளுடன் சேர்ந்து, மருந்துகள் காரணமாக ஏற்படும் இரத்த சோகை வகையானது கவனிக்கப்பட வேண்டிய குறிப்பிட்ட அறிகுறிகளைக் காட்டலாம்.

ஹீமோலிடிக் அனீமியாவின் அறிகுறிகள் – அடர்நிற (தேநீர் அல்லது கோலா நிற) சிறுநீர், உயர் இதய துடிப்பு, சில நேரங்களில் விரிந்த மண்ணீரல் (ஸ்ப்ளெனோமேகலி), உடல்நலக்குறைவு, மூச்சிரைத்தல்.

அப்ளாஸ்டிக் அனீமியாவின் அறிகுறிகள் – WBC எண்ணிக்கை 3500 க்கும் குறைவான cells/cumm, குறைந்த Hb எண்ணிக்கை அல்லது அளவு, இரத்தப்போக்கு, தொற்றுக்கான அதிக வாய்ப்புகள்

மெகாலோபிளாஸ்டிக் அனீமியாவின் அறிகுறிகள் – சோர்வுணர்வு, உடல்நலக்குறைவு, தசை பலவீனம், ஒழுங்கற்ற இதய துடிப்பு, மூச்சிரைத்தல்.

மருந்துகளால் தூண்டப்பட்ட இரத்த சோகையை கண்டறிதல்

Exit mobile version