Dr Maran – Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai

அதிகப்படியான மாதவிடாய் இரத்தப்போக்கு இரத்த சோகையை ஏற்படுத்துமா?

இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஹீமோகுளோபினை உருவாக்குவதற்கு போதுமான அளவு இரும்புச்சத்து உடலுக்கு தேவைப்படுகிறது. இரத்த சோகை ஏற்படுவதற்கான பல காரணங்களில் ஒன்று, சில பருவ வயது பெண் குழந்தைகளுக்கும், சில பெண்களுக்கும் ஏற்படும் மிக அதிகமான மாதவிடாய் இரத்தப்போக்கு ஆகும். இதனை பற்றி விரிவாக இங்கே அலசுவோம்.

பெண்களுக்கு மாதவிடாயின் போது உடலில் இருந்து இரத்தம் குறைகிறது. ஒவ்வொரு மாதமும் இரத்த இழப்பு ஏற்படுவதால் இயல்பாகவே பெண்கள் இரத்த சோகைக்கு ஆளாகிறார்கள். சாதாரண இரத்த இழப்புடன் கூடிய சாதாரண மாதவிடாயால் பொதுவாக சமச்சீரான சத்தான உணவை உண்பதில் பெண்கள் அக்கறை எடுத்துக் கொண்டால் அதிக ஊட்டச்சத்து இழப்பு ஏற்படாது. ஆனால் பெரும்பாலும் இந்தியாவில் உள்ள பருவப் பெண் குழந்தைகள் சரியான சத்தான உணவை உண்பதில்லை என்று தரவுகள் கூறுகின்றன. அதனால் தான் இந்தியாவில் பருவம் அடைந்த பெண் குழந்தைகளுக்கு ரத்த சோகை பாதிப்பு அதிகமாக உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

பெண்களுக்கு அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அசாதாரணமாக அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டால், அது மெனோராஜியா என்று குறிப்பிடப்படுகிறது. இரத்த இழப்பின் அளவு, மாதவிடாய் 5 நாட்களுக்கு மேல் நீடித்தல், ஆகிய காரணங்கள் மெனோராஜியாவுக்கு பங்களிக்கின்றன. 5 பெண்களில் 1 பெண் மாதவிடாய் இரத்தப்போக்கு அல்லது மெனோராஜியாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது. அத்தகைய பெண்கள் மாதவிடாய் வரும்போது அடிக்கடி பயப்படுவார்கள். அனைத்து பெண்களுக்கும் மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கு ஏற்படுகிறது. ஆனால் இரத்தப்போக்கு சாதாரணமாக இருக்கிறதா அல்லது அதிகமாக இருக்கிறதா என்று தெரியாமல் சிலர் குழப்பமடைகிறார்கள். பெண்களுக்கு அதிக இரத்தப்போக்கு இருக்கிறதா அல்லது மெனோராஜியா இருக்கிறதா என்பதை சரிபார்க்க கீழ்காணும் அறிகுறிகள் தென்படுகிறதா என்று பாருங்கள்.

உங்களுக்கு மெனோராஜியா இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தும் அறிகுறிகள்

மெனோராஜியா ஏற்படுவதற்கான காரணங்கள்

மெனோராஜியா ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஹைப்போ தைராய்டிசம், கருப்பை நார்த்திசுக்கட்டிகள், பாலிப்ஸ், கருப்பையில் உள்ள தழும்புகள் திசுக்கள், எண்டோமெட்ரியோசிஸ், அடினோமயோசிஸ் போன்ற ஹார்மோன் சமநிலையின்மை, கருப்பை செயலிழப்பால் முட்டை வெளியேறுதலில் ஏற்படும் சிக்கல்கள், கருத்தடைக்கான கருவிகள் பொருத்தி இருத்தல், சில மருந்துகள் போன்றவை சில காரணங்களாக அறியப்படுகின்றன.

இரத்த சோகை ஏற்படுவதற்கு மெனோராஜியா காரணமாக இருக்க முடியுமா?

இரத்த சோகையை ஏற்படுத்துவதில் மெனோராஜியா நிச்சயமாக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நபருக்கு சாதாரண இரத்தப்போக்கு இருந்து அவர் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளும் நல்ல உணவுப் பழக்கம் கொண்டிருந்தால், அந்த நபர் இரத்த சோகையால் பாதிக்கப்படாமல் இருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மெனோராஜியா உள்ள பெண்களில், ஊட்டச்சத்து குறைபாடும் இரும்புச்சத்து குறைபாடும் பாரிய அளவில் உள்ளது. அவர்கள் அனுபவிக்கும் கடுமையான இரத்த இழப்பு உண்மையில் உடல் செய்யும் சாதாரண இரத்த உற்பத்தியால் ஈடுசெய்ய முடியாது. எனவே ஊட்டச்சத்து முதலில் போதுமானதாக இருக்காது. மேலும், மெனோராஜியாவைப் போலவே குறுகிய காலத்திற்குள் கடுமையான இரத்த இழப்பு ஏற்படும் போது, இழந்த இரத்தத்தை உடலால் உற்பத்தி செய்யவே முடியாது. எனவே கடுமையான இரத்த இழப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், இரத்த சோகை ஏற்படும்.

உங்களுக்கு அதிக இரத்தப்போக்கு இருந்தாலோ, இரத்த சோகை இருப்பதாக சந்தேகித்தாலோ என்ன செய்வது?

உங்களுக்கு மெனோராஜியா (Menorrhagia) அறிகுறிகள் இருந்தாலோ, வெளிர்ந்த தோல், சோர்வு, பலவீனம், மூச்சுத் திணறல், தலைச்சுற்றல், தலைவலி போன்ற இரத்த சோகையின் அறிகுறிகளை நீங்கள் காண்பிப்பதாக சந்தேகித்தாலோ, உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும். உங்களுக்கு இரத்த சோகை இருக்கிறதா என்பதை அறிய முழுமையான இரத்த எண்ணிக்கை (CBC) அறிக்கையைப் பெறுமாறு மருத்துவர் உங்களிடம் கேட்கலாம். இதற்கு இணையாக, உங்களுக்கு மெனோராஜியா இருந்தால், மருத்துவர் சில நோயறிதல் முறைகளை பரிந்துரைப்பதன் மூலம் மெனோராஜியாவின் காரணத்தைக் கண்டறியச் சொல்வார். மெனோராஜியா காரணமாக இரத்த சோகை இருப்பது உறுதிசெய்யப்பட்டால், மருத்துவர் உங்களுக்கு இரத்த சோகைக்கான மருந்துகளை (இரும்புச் சத்துக்கள்) பரிந்துரைப்பார். அதே நேரத்தில் மெனோராஜியாவுக்கான சிகிச்சையை உங்களுக்குத் தெரிவிப்பார். மெனோராஜியாவின் சில காரணங்கள் மருந்துகளால் குணப்படுத்த இயலும். ஆனால் சில காரணங்களான எண்டோமெட்ரியோசிஸ், ஃபைப்ராய்டுகள், பாலிப்ஸ் போன்றவற்றிற்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

ஒரு பொது விதியாக, உங்களுக்கு இரத்த சோகை இருந்தால், இரத்த சோகைக்கான சிகிச்சையைப் பெறும்போது, அடுத்த 2 ஆண்டுகளுக்கு இரத்தத்தில் இரும்பு அளவானது நிலைத்தன்மையைக் காண்பிக்கும் வரை ஒரு நெறிமுறையாக ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் இரத்த சோகை இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்துக் கொள்வது நல்லது.

 

Exit mobile version