Dr Maran – Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மூல நோயை எவ்வாறு சமாளிப்பது?

வீங்கிய இரத்த நாளங்கள் உங்கள் ஆசனவாயைச் சுற்றி அதிக அழுத்தம் கொடுக்கும் போது மூல நோய் தோன்றுகிறது. மூலம் ஏற்பட்ட பெரும்பாலான மக்கள் இது குறித்து வெளிப்படையாகப் பேச விரும்புவது இல்லை. ஆனால் இந்த நிலையிலேயே பலர் வாழ்க்கையை வாழ்வர். மூல நோய் பெரியவர்களை மட்டுமில்லாமல் சிரியவர்களையும் பாதிக்கும். பெண்களில், மூல நோய் பெரும்பாலும் அவர்களின் கர்ப்ப காலத்தில் ஏற்படலாம். குறிப்பாக சொல்லவேண்டும் ஏன்றால் அவர்களது மூன்றாம் மாதம் தொடங்கி பிரசவம் நடப்பது வரை தோன்றலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மூல நோயை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்த சில குறிப்புகளை இங்கே உங்களுக்கு வழங்குகிறோம்.

கர்ப்ப காலத்தில் மூல நோய் ஏற்படுவதற்கான காரணங்க என்னென்ன?

பெண்கள், தங்கள் கர்ப்ப காலத்தில், நிறைய உடல் மாற்றங்களுக்கு ஆளாகிறார்கள். அத்தகைய ஒரு மாற்றம் கருப்பையின் விரிவாக்கம் ஆகும். கரு உருவாகும் போது கருப்பை பெரிதாக வளரத் தொடங்கும் போது, அது இடுப்புக்கு கீழே அழுத்தத்தை கொடுக்கிறது. இது ஆசனவாய் மற்றும் மலக்குடலைச் சுற்றியுள்ள இரத்த நாளங்களில் அதிக அழுத்தத்தை அளிக்கிறது. பிரசவத்தின்போது முக்கி குழந்தையை வெளியே தள்ளுவது மூல நோயின் நிலையை மோசமாக்கலாம். ஆனால் கர்ப்ப காலத்தில் மூல நோய் ஏற்படுவது பொதுவாக தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை. இது தாய் மற்றும் குழந்தைக்கு எந்தத் தீங்கும் ஏற்படுத்தாது என்றாலும், கர்ப்ப காலத்தில் தாய்க்கு மிகவும் எரிச்சலூட்டும் சூழ்நிலையை அளிக்கிறது.

கர்ப்ப காலத்தில் மூல நோயை தவிர்ப்பது எப்படி?

கர்ப்ப காலத்தில் மூல நோய் ஏற்பட்டால் அதை எவ்வாறு சமாளிப்பது?

Exit mobile version