பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை எப்படி கண்டறிவது
பெருங்குடல் புற்றுநோய் (Colon Cancer), கொலோரெக்டல் புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது. இது உலகில் மிகவும் பரவலாக உள்ள புற்றுநோய்களில் ஒன்றாகும். இது அமைதியாக வளருகிறது. அப்படி வளர்ந்த பின்னர் மட்டுமே அறிகுறிகளையும் உணர்வுகளையும் காட்டுகிறது. ஆனால் பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகளை அடையாளம் காணும்போது, உயிர் காக்கும் சிறந்த முடிவுகளை நம்மால் எடுக்க முடியும். வயது (50 வயதுக்கு மேல்), பெருங்குடல் புற்றுநோய் அல்லது வேறு எந்த வகை புற்றுநோயின் குடும்ப வரலாறு, உடல் பருமன், உடல் செயல்பாடு இல்லாத வாழ்க்கை முறை போன்ற ஆபத்து காரணிகள் உள்ளவர்களுக்கு இது நேரலாம். இந்த நுட்பமான அறிகுறிகளைப் பற்றி விழிப்புணர்வு இருப்பது உயிர்களைக் காப்பாற்ற உதவும்.