பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு: பித்தப்பை இல்லாமல் நம் உணவுமுறை
கோலிசிஸ்டெக்டமி, பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது, இது பித்தப்பை கற்கள் மற்றும் சில பித்தப்பை நோய்களுக்கு பொதுவான ஒரு சிகிச்சை முறையாகும். இந்த செயல்முறை வலிமிகுந்த அறிகுறிகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. ஆனால் இதற்குப்பிறகு சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இது உணவு விஷயத்தில் உண்மையாகும். பித்தப்பை, பித்தநீரை சேமித்து வெளியிடுவதில் பங்கு வகிக்கிறது. பித்தநீர் என்பது ஒரு செரிமான திரவமாகும். இது கொழுப்புகளை கரைத்து ஜீரணிக்க உதவுகிறது. பித்தப்பை இல்லை என்றால், பித்தநீர் கல்லீரலிலிருந்து நேரடியாக சிறுகுடலுக்கு ஒரு தொடர்ச்சியான, கட்டுப்பாடற்ற ஓட்டத்தில் செல்கிறது. இது வெளிப்படையாக செரிமானத்தை பாதிக்கலாம்.