18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

மூப்பு எனப்படும் வயதாவது மூல நோய் மீது ஏற்படுத்தும் விளைவுகள் என்னென்ன

முதுமை என்பது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு கட்டமாகும். அது பல உடல் மாற்றங்களையும் கொண்டு வருகிறது. வயதானதன் பல அம்சங்கள் நன்கு புரிந்து கொள்ளப்பட்டாலும், மூல நோய் போன்ற பிரச்சனைகளின் விளைவுகள் சில நேரங்களில் பேசப்படுவதில்லை. இந்த கட்டுரையில், மூப்புக்கும், மூல நோய்க்கும் இடையிலான உறவைப் பார்ப்போம். பரவலாக உண்டாகும் இந்த மருத்துவ நிலையின் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தை அது எவ்வாறு பாதிக்கலாம் என்பது பற்றியும் பார்க்கலாம்.

மூல நோய்: ஒரு சுருக்கமான பார்வை 

முதுமையின் தாக்கங்களை ஆராய்வதற்கு முன், மூல நோய் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்வது அவசியமாகும். மூல நோய், ஆங்கிலத்தில் பைல்ஸ் என்று அழைக்கப்படுகிறது. மலக்குடலில் உட்பகுதியிலோ, ஆசனவாயை சுற்றியோ ஏற்படும் வீங்கிய நரம்புகளே மூல நோய் எனப்படும். இதனால் அசௌகரியம், வலி, இரத்தப்போக்கு ஏற்படலாம். மூலநோய், உள்மூலம், வெளிமூலம் என்று வகைப்படுத்தப்படுகிறது.

மூல நோய் மீது வயதின் தாக்கம்

நாம் வயதாகும்போது மூல நோயின் வளர்ச்சிக்கும், அது மோசமடைவதற்கும் பல காரணிகள் பங்களிக்கலாம்:

திசு முறிவுகள்

மலக்குடல் மற்றும் குத பகுதிகளில் உள்ள நரம்புகளை முட்டுக்கொடுக்கும் திசுக்கள் வயதானவுடன் தளரக்கூடும். இந்த பலவீனமானது நரம்புகளை நீர் கோர்த்தலுக்கும், மூலநோய் பாதிப்புக்கும் எளிதில் உள்ளாக்கலாம்.

இரத்த ஓட்டம் குறைதல்

நமக்கு வயதாகும்போது, ​​நமது இரத்த ஓட்ட அமைப்பின் செயல்திறன் படிப்படியாக குறைகிறது. இப்படி  குறைவதால் நரம்புகளில் இரத்தக் கட்டிகள் உருவாகலாம். இது மூல நோய் வளர்ச்சிக்கு பங்களிக்கும்.

குடல் இயக்கங்களின் போது சுருங்குதல்

வயதானவர்களுக்கு மலச்சிக்கல் மிகவும் பொதுவாக ஏற்படுவதாகும். மேலும் இது குடல் இயக்கத்தின் போது அடிக்கடி சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்த சிரமமானது, மலக்குடல் மற்றும் குத நரம்புகளில் ஒரு வித அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இது மூல நோய்க்கு வழிவகுக்கலாம் அல்லது அதனை அதிகப்படுத்தலாம்.

வயது தொடர்பான ஆபத்து காரணிகள்

வயது தொடர்பான பல காரணிகள் மூல நோய் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கலாம்:

  • உட்கார்ந்த வாழ்க்கை முறை: வயதாகும்போது உடலில் உள்ள சுறுசுறுப்பு குறைந்துபோகிறது. இது பலவீனமான இரத்த ஓட்டத்துக்கு பங்களித்து, மூல நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
  • உணவில் மாற்றங்கள்: வயதாகும்போது நார்ச்சத்து குறைகிறது. இதுவும் மலச்சிக்கல் மற்றும் குடல் இயக்கத்தின் போது சிரமத்திற்கு வழிவகுக்கும்.
  • நாள்பட்ட நோய்: இரத்த ஓட்டம் மற்றும் குடல் செயல்பாட்டில் அவற்றின் தாக்கம் காரணமாக, நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த நிலைகள் கூட மூல நோய் வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடும்.

வயதானவர்களுக்கான பொதுவான தடுப்பு நடவடிக்கைகள்

வயதானவர்கள் மூல நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் அதே வேளையில், அவற்றைத் தடுக்க அல்லது நிர்வகிக்க வயதானவர்கள் செய்யக்கூடிய நடவடிக்கைகள் சில உள்ளன. அவை:

  • உணவில் மாற்றங்கள்: அதிக நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்வது வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவித்து, மலச்சிக்கல் அபாயத்தைக் குறைக்க உதவும்.
  • நீர்ச்சத்துடன் உடலை வைத்துக்கொள்வது மலத்தை மென்மையாக்கி அவற்றை எளிதாக வெளியேற்ற உதவும்.
  • உடல் செயல்பாடு: வழக்கமான உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், மூல நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
  • சுகாதாரம்: ஆசனவாய் சுகாதாரத்தை முறையாக பராமரிப்பது மூல நோயால் ஏற்படும் எரிச்சல் மற்றும் அசௌகரியத்தை குறைக்க உதவும்.

மூப்பு உடலில் மாற்றங்களை ஏற்படுத்தும். இது ஒருவரை மூல நோய்க்கு ஆளாக்கலாம். பலவீனமான திசுக்கள், இரத்த ஓட்டம் குறைதல், சோம்பிய வாழ்க்கை முறை மற்றும் ஊட்டச்சத்து மாற்றங்கள் போன்ற வயது தொடர்பான காரணிகள் அனைத்துமே இதற்கு பங்களிக்க முடியும். இருப்பினும், வயதானவர்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும், தேவைப்படும்போது மருத்துவ உதவியைப் பெறுவதன் மூலமும் மூல நோயின் தாக்கங்களைத் திறம்பட நிர்வகிக்கவும், குறைக்கவும் முடியும். மூப்புக்கும், மூல நோய்க்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்வது, வயதானவர்களின் நல்வாழ்வில் அவர்கள் எடுத்து வைக்கும் முதல் படியாகும்.

Call Now